மோகனின் -மைனா Tamil Love Story
#கதை 1
மோகனின் -மைனா

என் பேரு மோகன் , வழக்கம் போல நானும் எல்லாரும் சொல்றாங்கன்னு இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்தேன் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங்.
ஹாஸ்டல் பிரண்ட்ஸ் லாம் எனக்கு செம்மையை செட் ஆயிட்டாங்க பட் கிளாஸ் ல தான் கொஞ்சம் போர் அடிச்சது ஒரு மாசம் .எங்க டிபார்ட்மென்ட் ல ரெண்டு செக்க்ஷன் .
ஒரு மாசம் கழிச்சு பக்கத்துல கிளாஸ் ல இருந்து எங்க கிளாஸ் கு கொஞ்சம் பேரு அனுப்பிட்டாங்க.
முதல் பார்வை :
அப்பதான் அவளை பாத்தேன் ,என் கை ,கால் லாம் ஒரு நடுக்கம்,படபடப்பு ,நிக்க முடிலங்க .அவ கண்ணு என்கிட்ட ஏதோ சொல்லிச்சு .என்ன பண்றதுனு
தெரில ,அப்புடியே போச்சு ,பசங்க கிட்ட யார்கிட்டயோ நா சும்மா பேசும் போது சொன்னேன் .அவனுக கதை கட்டி ஓட்ட ஆரபிச்சுட்டாங்க .
கள்ள மவுனம் :
எவ்ளோ நடந்தாலும் அவளுக்கு தெரியாத மாறியே இருப்பாங்க .செம்ம கோவம் வரும் ஆனா அத்தான் அவ கிட்ட புடிச்சது .
நானும் கண்டுக்காத மாறியே இருப்பேன் ஆனா அவ இருக்கற இடத்துல எல்லாம் நானும் இருந்தேன். இதுல கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்னனா பசங்க ஓட்டறதுனால அவ என்கிட்ட பேசவே மாட்டா.
மைனா வம்பு :
காலேஜ் ல ,ஐ வி கூட்டிடு போனாங்க அப்போவாச்சு பேசுவானு நினைப்பேன் ,பசங்களும் அவ பக்கத்துல உக்கார வைக்க பிளான் பண்ணி இருந்தாங்க
எனக்கும் ஆச (உங்களுக்கும் இருந்து இருக்குமே ). எப்படியோ உக்கார வெச்சுட்டாங்க ,அதான்
பிரண்ட்ஸ் ,அந்த டைம் ல தான் மைனா பிலிம் வந்துச்சு ,அதுல வர பாட்டு லாம் எனக்குன்னு எழுத்தான மாறி பீல் பண்ணுவேன் ,(மைனா மைனா நெஞ்சு குள்ள வம்பு பண்ணுது).
காலேஜ் ல annualday வந்தது .என்ன னு கூட தெரியாம எல்லாபோட்டிளையும் நேம் கொடுத்துட்டேன் .ஏன்னு உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும் .ஆமாங்க அவ
பார்ட்டிசிபேட் பன்னதுனால நானும் பண்ணிட்டேன் .இவ்ளோ நாளும் குனிஞ்ச தல நிம்முரமா இருப்பாங்க ஆனா அன்னைக்கு அவ ஸ்டேஜ் ல ஆடுன ஆட்டம் இருக்கே , எனக்கு அவதனானு சந்தேகம் வந்துருச்சு .இப்புடியே அந்த இயர் முடிஞ்சது.
வருடம் மூன்று :
மூணாவது வருஷம் காலேஜ் செம்ம ஜாலி யா போச்சி என் ப்ரண்ட்ஸ் ரெண்டு பெரும் லவ் பண்ண ஆரமிச்சுட்டாங்க .ஒருத்தன் டபுள் சைடு ,இன்னொருத்தன்
ஒன் சைடு ,நாங்க மூணு பேரும் லவ் பாய்ஸ் , எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்போம் ,மத்தவங்கள கழட்டி விட்ருவோம் ,எல்லாமே பிளான் பண்ணி பண்ணுவோம். அவங்களஇம்ப்ரெஸ் பண்ணனும்னு.
நா காலேஜ் கிட்ட இருக்க ரூம் ல தங்கி இருந்தேன் ,அவ பஸ் ஏறி ஹாஸ்டல் போவ , தினமும் காலேஜ் விட்ட உடனே அவ பஸ் ஸ்டாப் வரிக்கும்போய் விட்டு தான் வருவோம் (லவ் பாய்ஸ்). இப்படியே வருஷம் முடிஞ்சது.
பிரியும் நேரம் :

வழக்கம் போல கடைசி வருஷம் கொஞ்சம் கஷ்டமா தன இருக்கும் எனக்கும் அப்புடித்தான் அவ ,ரூம் பக்கத்துல இருக்கனும் னு என் பிரண்ட்ஸ் ரூம் ல போய் தங்கினேன் , யார்டையும் சொல்லாம கூட அவளை பக்க பாக்க போவேன் என் பிரண்ட்ஸ் லவர் அ பாக்க போகுற சாக்குல ( லவ் பாய்ஸ் கூட),
மைனா படம் கூட பாத்தோம் பக்கத்துல பக்கத்துல, மறக்க முடியாத நாள் என் வாழ்க்கைல அந்த படத்துல நான் நடிச்ச மாரி இருந்துச்சு .
கடைசி வருஷம் முடிஞ்சது என்ன பண்ணனும் னு தெரில ,பஸ் ஸ்டாண்ட் வரிக்கும் போய் வழி அனுப்பிட்டு நானும்( என் மனசு மட்டும் ) அவ கூடவே அவங்க வீட்டுக்கு போய்ட்டேன் .
எனக்கு காலேஜ் முடிஞ்சும் ஊருக்கு போக மனசு இல்ல ,எதோ ஒரு வலி என்ன தாக்குச்சு .சாப்பிட முடில ,தூங்க முடில,யார்கிட்டயும் சொல்ல முடில, எப்போ பாப்போன்னு தோணுச்சு .
அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சி பிரண்ட்ஸ் கு கல்யாணம் அங்க கண்டிப்பா அவ வருவான்னு நெனச்சேன் ,அவளும் வந்த ,அவ்ளோ சந்தோஷம் லூசு மாரி என்ன என்னமோ
பண்ணேன் .அப்பறம் முடிவு பண்ணேன் எல்லாரு கல்யாணத்துக்கும் வரணும் அவளை பாக்கணும். ஆனா அதன் கடைசி யா பாத்தது அவள.
ஒரு நாள் போன் கால் வந்தது அவளேதான் எனக்கு அவ்ளோ சந்தோஷம் ஒரு சில நிமிஷத்துலயே போயிருச்சு அவளுக்கு கல்யாணமாம் இன்விட் பண்ணா .என்னால எதும் பேசமுடில சரி னு சொல்லிட்டு போன் வெச்சுட்டேன்
என்னால அங்க போய் அவளை பாக்க முடியாது .அதனால நா போகல. என்மேல தான் தப்பு அவகிட்ட இப்போ வரிக்கும் நா என் லவ் சொன்னதே இல்ல
ஒரு வேலை நான் சொல்லி இருந்தா ஓகே சொல்லிருப்பாளோ அப்புடி னு இப்போ வரிக்கும் கஷ்டமா இருக்கு. சொன்ன புரியாது அனுபவிச்சாதான் புரியும்
நீங்களாச்சு இப்போவே பொய் உங்க லவ் ஆஹ் சொல்லுங்க ப்ளீஸ் .
#LOVE_RAM
Search related topic:
- Tamil love story
- love story in tamil
- romantic love story in tamil
- tamil kadhal kadhaigal
- tamil love books
- tamil kavithai